ஈராக் அழிவு தரும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி அமெரிக்க படைகள் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இந்த போரினால் 69 ஆயிரம் பேர் பலியானதாக ஈராக் அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் வரை நடந்த போரில் 69 ஆயிரத்து 263 பேர் இறந்திருப்பதாகவும், 2 லட்சத்து 39 ஆயிரத்து 133 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
போரில் 76 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. ஆனால் அமெரிக்க போரினால் 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானதாக மனித உரிமை அமைச்சகம் கூறியது.