இதுகுறித்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.