இந்தியாவில் வேலை அனுபவம் பெற இங்கிலாந்து மாணவர்கள் ஆர்வம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:45 IST)
இந்திய நிறுவனங்களில் வேலை அனுபவம் பெற இங்கிலாந்து மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதாக பிரிட்டன் - இந்திய தொழிற் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் பிஸ்னஸ் மற்றும் நிதி துறை படிப்புகளை படித்து முடிக்கும் மாணவர்கள், தங்களது படிப்புக்கான பணி அனுபவத்தையும், பயிற்சியையும் இந்திய நிறுவனங்கள் மூலமாக பெற விரும்புகின்றனர்.

இதனை உறுதிபடுத்தும்விதமாக பிரிட்டன் - இந்திய தொழில் கூட்டமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ், இங்கிலாந்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்ற 10 பிரிட்டிஷ் மாணவர்கள், பணி அனுபவம் பெறுவதற்காக இந்திய நிறுவனங்களில் வேலைக்காக சேர்ந்துள்ளனர்.

இது தவிர மேலும் பல பிரிட்டிஷ் மாணவர்களும் இந்திய நிறுவனங்களில் சேருவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பதாகவும், தங்களது படிப்புக்கேற்ற பணி அனுபவத்தை சோதித்து பார்ப்பதற்கான சூழல் இந்திய நிறுவனங்களில் அமையுமா என்பதை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் பிரிட்டன் - இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்