ஆப்கான் : குழந்தைகள் 9 பேரை சுட்டு கொன்ற அமெரிக்க ராணுவ வீரர்
திங்கள், 12 மார்ச் 2012 (19:14 IST)
ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் 9 பேரை அமெரிக்க ராணுவ வீரர் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றார்.
ஆப்கானிஸ்தான் , காந்தகார் மாகாணத்தில் உள்ள நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைத் தளத்தில், பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர், திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டார்.
இந்த தாக்குதலில் 15 பேர் பலியாகினர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர். இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரரை நேட்டோ அதிகாரிகள் கைது செய்தனர்.
எனினும் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதற்கு காரணம் என்ன என்பது இது வரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டு கொண்டுள்ளார்.
NEWS SUMMARY: US SOLDERS SHOT DEAD NINE CHILDREN IN AFGHANISTAN.