அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 20 தீவிரவாதிகள் பலி

அமெரிக்கப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெமான்ட் மாகாணத்தில் 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கக் கூட்டுப்படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மான்ட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கானிஸ்தான், அமெரிக்கப் படைகள் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இதன் பின்னர் நிகழ்விடத்தில் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க வான்வழித் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 20 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பேச்சாளர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்