பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு

வியாழன், 22 மார்ச் 2012 (14:21 IST)
பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு பதிவாகியிருந்தது.

கோராக மேட்டு நகரத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்