குடும்ப தலைவிகளுக்கான மிகவும் பயனுள்ள டிப்ஸ் !!

புதன், 20 ஜூலை 2022 (15:24 IST)
பாயாசம் செய்யும் பொழுது கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய் விட்டாள் பயபடவேண்டாம் “கடலை மாவை நெய்யில் வறுத்து” தண்ணீர் கரைத்துக் கொண்டு கலந்து கொண்டால் போதும் கெட்டியாகவும் வித்தியாசமான சுவையில் மாறிவிடும்.


மாவு உருட்டும் பொழுது பெரிதாக்க உருட்டிக் கொண்டு அதை “கத்தியால் நான்காக வெட்டி” பூரி சுட்டால் வித்தியாசமான வடிவத்திலும் ஒரே மாவில் நான்கு பொருள்கள் என்று கரமாகவும் சுட்டு விடலாம்.

உப்பு காரம் போன்ற உணவு வகைகளில் உப்பு காரம் அதிகமாகிவிட்டால் வருத்தப்பட வேண்டாம் காய்ந்த “பிரட் துண்டுகள் அல்லது ரஸ்க் துண்டுகள்” இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதோடு சேர்த்து விட்டால் போதும் உப்பு சரியாகிவிடும்.

அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு அதனால் ஏற்படும் கோளாறுகள் வாயு மிகவும் அவதிப்படுவார்கள் அதிலிருந்து விடுபட “டீஸ்பூன் சீரகத்தை பொடித்து” சேர்க்கவேண்டும் “பூண்டு பற்களை” அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள் சுட்டு எடுத்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வாயு தொந்தரவு ஏற்படாது.

மைதா ரவை அரிசி போன்ற பொருட்களில் பூச்சி புழுக்கள் வந்து சேரும் தவிர்க்க “வசம்பை இன்னிக்கி சேர்த்துவிடுங்கள்” பூச்சி புழுக்கள் அதில் வரவே வராது.

ஃப்ரூட் சாலட் வெட்டும் பொழுது அவைகள் கருப்பாக மாறி விடும் இவ்வாறு நிறம் மாறாமல் இருக்க “எலுமிச்சை சாறு பிழிந்து” அதில் புரட்டி எடுத்துவிட்டு செய்தால் பிரஷ்ஷாக அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

வாழைக்காய் வாழைத்தண்டு வாழைப்பூ போன்றவற்றை நிறம் மாறாமல் இருக்க அவற்றை அறிந்த பின்பு “மோர் கலந்த நீரில் போட்டு” வைப்போம் அதேபோல் போட்டு வைத்தாலும் நிறம் மாறாமல் புளிப்பு சுவையும் இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்