- ஒளவையார்.
`விநாயகன்' என்றால் முதல்வன் என்று பொருள். நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், வேறு எந்தக் கடவுளுக்குப் பூஜை செய்தாலும், முதலில் விநாயகரை நினைத்து வழிபட்ட பின்னரே மற்ற கடவுள்களுக்குப் பூஜை செய்கிறோம். விநாயகரின்றி எதுவும் நடைபெறாது.
யாதொரு வினைக்கும் முன் விநாயகர் வழிபாடு
விநாயகருக்கு பல பெயர்கள் இருந்தாலும், அவர் யானைமுகத்தோற்றம் உடையவரே ஆவார். ஒவ்வொரு பெயருக்கும் காரணங்களும் உண்டு. கணபதி என்ற பெயருக்கு `கணங்களுக்கு' எல்லாம் அதிபதி - தலைவர் என்று பொருள். விநாயகரின் தந்தை சிவபெருமான். அவரைச் சுற்றியிருப்பது பூதகணங்கள். சிவனை வணங்க வருவோர் தேவகணங்கள். அசுர கணங்களின் ஒப்பற்ற கடவுளும் சிவபெருமானே.