அரிசியை நீரில் நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக் கொள்ளவும்.
இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.