புளி தண்ணீரில், வேகவைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகப் பொடி மற்றும் நறுக்கிய பைனாப்பிள், தக்காளி, நசுக்கிய பூண்டு, உப்பு, தனியாப் பொடி சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போடவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி, நுரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி தூவி இறக்கவும்.