தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு, மிக எளிதாகவும், சுவையாகவும் சமைத்திடலாம்.
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிறிது சிவந்ததும் அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு வற்றல் மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். இதில் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும்.
ஆற வைத்த அனைத்து பொருட்களையும் அரைத்து எடுக்கவும். எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கொட்டவும்.