செய்முறை:
ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்துக்கொள்ளுங்கள். கொத்தவரங்காயை குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து 2 விசில் வர வேகவைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் சூடு தணிந்ததும் அவற்றை உடைத்து உதிரிகளாக பிசைந்துகொள்ளுங்கள். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேருங்கள். பின் பருப்பு சேர்த்து வதக்குங்கள். அதன் ஈரப்பதம் வற்றியதும் வேகவைத்த கொத்தவரங்காயை தண்ணீரை வடித்து கொட்டி கிளறுங்கள்.