அரிசி, துவரம்பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளக்காய், இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு இவற்றை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளைபோட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தேங்காய்ப்பவுடர் இவற்றையும் போட்டு வேகவிடவும்.
வெந்தது, ஏற்கனவே வெந்து எடுத்து வைத்துருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மாசாலாத்தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் விடவும்.