செய்முறை:
பச்சரிசி, வத்தல் மிளகாய், துவரம் பருப்பு, தக்காளி இவற்றை ஒரு பாத்திரத்தில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பத்தத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் பரவலாக ஊற்றவும். மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். இப்போது சுவையான தக்காளி தோசை தயார்...