இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.
செய்முறை:
சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மஞ்சள் தூள், தேவைக்கு ஏற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடிக்கட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கருவேப்பில்லை மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு பச்சை வாடை போக வதக்கவும். பிறகு வேக வைத்த கிழங்கு சேர்த்து பிரட்டவும்.