வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் வெந்து எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவிவிடவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.