கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூடி 5 நிமிடம் வத்திருந்து பின் திறந்து சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை நனைய வைத்து கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்து, கத்தரிக்காய் வெந்தது பார்த்து என்ணெய் தெளிய இறக்கவும்.