முதலில் ரொட்டி துண்டுகளை நான்காகப் பிய்த்து மிக்ஸியில் போட்டு முதல் ஸ்பீடில் ஒரு சுற்று சுற்றவும். நன்றாக பஞ்சு போல் தூளாகி விடும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் அல்லது நெய் விடவும். சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
பின்னர் பருப்பு வகைகளைச் சேர்த்து பொன்னிறமானவுடன், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து (கொத்துமல்லி தவிர) மேற்சொன்ன பொருள்களை பிரட் தூளுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.