ரஷ்யாவில், வடும் ரஸ்டாம் என்பவர், சாலையில் நடந்து சென்ற போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயும் இல்லை. எனவே அவர் உற்று கேட்டபோது, அது தரைக்கு அடியிலிருந்து வருவது தெரியவந்தது.
உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரே அந்த இடத்தை தோண்டி அங்கிருந்த ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டார். விசாரணையில் அந்த நாய் இருந்தது தெரியாமல், அந்த இடத்தில் நடைபாதை அமைத்து விட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.