பிரெட் காய்ந்து விட்டால் அதைத் தூக்கி போடாமல் தண்ணீரில் நனைத்து மாவாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் கடலைமாவு, ஒரு சிட்டிகை உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பிரெட் மாவில் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் பக்கோடா ரெடி.
பூரி உப்பிக் கொண்டு வருவதற்கு மாவு பிசையும் போதே கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், 1 டீஸ்பூன் ரவையும் கலந்து பிசையுங்கள். 1/2 டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டால் உப்பி வந்த பூரி அமுங்காமல் அப்படியே இருக்கும்.
புதினா, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது அவற்றுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்போது சிறிது பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக் கொண்டால், மேலே கரகரப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.