பரத்தின் திருத்தணி

பழனி படம் தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியது என்று அப்படம் வெளியான போது தெரிவித்திருந்தார் அதில் ஹீரோவாக நடித்திருந்த பரத். பேரரசு இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

படத்தின் பெயர் திருத்தணி என்பதுவரை முடிவு செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை படத்தை இயக்கிவரும் பேரரசு அந்தப் படம் முடிந்ததும் பரத் நடிக்கும் திருத்தணி படத்தை இயக்கவுள்ளார். பேரரசு படங்களுக்கேயுரிய பன்ஞ் டயலாக், குத்துப் பாடல், சென்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் நிறைந்ததாக அப்படம் இருக்குமாம்.

டிசம்பரில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ப்ரியாமணியுடன் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆறுமுகம் படத்தில் நடித்து வருகிறார் பரத்.

வெப்துனியாவைப் படிக்கவும்