உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விழா நடைபெறுவது வழக்கம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை 50 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து மொத்தமாக 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.