சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
இவ்வளவுப் பெருமை மிக்க சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் சீனாவுக்கு வருகிறார்கள். இதனால் சீனப் பெருஞ்சுவரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப்பெருஞ்சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். கூடாரம் அமைப்பதற்காக சீனப் பெருஞ்சுவரில் இரு கற்களுக்கு இடையே உள்ள சிமெண்ட் பகுதியில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். போகும் போது அந்த ஆணிகளை அவசர கதியில் பிடுங்குவதால் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்து வருகிறது.