சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்டது மதுரை. இந்த மதுரையில், 100 ரூபாய் கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த சிலை இப்போது எங்கே இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இது போன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார்.