ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்

செவ்வாய், 10 மே 2016 (01:30 IST)
தமிழகத்தில், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தேர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, மதுரையில், திமுக - காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
இந்நிலையில், மே 10 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.
 
இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு வந்துள்ளது. அதில், ''காரைக்காலில் பிரசாரம் செய்யும் போது, உங்களையும், உங்கள் தலைவரின் மகன் ராகுல் காந்தியையும் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்