தி.மு.க தேர்தல் அறிக்கையை கூட்டி கழித்து எடை போட்டு பார்த்தால் நன்மை குறைவாகவும், தீமைகள் அதிகமாகவும் உள்ளது. இதை இரண்டையும் போல, டாஸ்மாக் மதுகடைகளை மூடவும், லோக் ஆயுக்தா கொண்டு வரவும், தொழிற்சாலைகளுக்கு கொடுப்பது போல, விவசாயத்திற்கு மும்முறை மின்சாரம் கொடுப்பது என்பது போல அதையெல்லாம் வரவேற்கிறேன். இதையும் வரவேற்கிறோம், விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் என்று சொல்லி இருக்கிறார்கள் அதையும் ஏற்றுக் கொள்கிறோம், அது போக விவசாயிகளுக்கு ஆண்டு தோறும், வேஷ்டி, உடைகளையும் ரூ ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக இறந்து போனதான் கோடி போடுகிறார்கள். நெற்றியில் ஒரு ரூபாய் வைப்பார்கள். அப்படி தான் உள்ளது ஐந்நூறு ரூபாய் கொடுப்பது. விவசாயிகளாகிய நாங்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல, அரசு ஊழியர்களுக்கு எப்படி தேர்தல் கமிஷன் படி பரிந்துரையின் படி சம்பளம் தருகீறீர்களோ, அது போல,விவசாயிகள் கமிஷன் பரிந்துரையை ஏற்று எங்களுக்கு சலுகைகளை கொடுங்கள் இலவசங்கள் வேண்டாம்.