என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்: ஜெயலலிதா

வெள்ளி, 6 மே 2016 (18:54 IST)
கடந்த தேர்தலில் என்னை வெற்றிப் பெறச் செய்த நீங்கள் இந்த முறையும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உரையாற்றினார்.


 
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று தான் வேட்பாளராக போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் இன்று அதிமுக அரசின் நடவடிக்கையால் மின்வெட்டிலிருந்து மீண்டுள்ளது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னை மழை வெள்ளத்தில் பாதித்தப்போது போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்ப்பட்டு ஆர்.கே.நகர் பகுதிக்கு மட்டும் ரூ:48 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளதாகவும், ஆர்.கே.நகரில் 306 உட்புறச் சாலைகள் புதுபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் என்னை வெற்றிப் பெறச் செய்தீர்கள், அதேபோல் வரும் தேர்தலிலும் என்னை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்று ஜெயலலிதா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்