கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் தலைமையில் நடைபெற்ற போது, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை , மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி இழிவாக பேசியது, கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது போன்ற செயல்பாடுகள் காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஜோதிமணி காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.