அவன் ஒரு திருடன் - வெளுத்து வாங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

செவ்வாய், 10 மே 2016 (22:52 IST)
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேர்தலில் தவறு செய்யும் நபர்கள் குறித்து வெளுத்து வாங்கியுள்ளார்.
 

 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் 100 சதவீதம் முழுமையான வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் செயலாற்றி வருகிறது.
 
ஆனால், தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
 
இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்தும், வாங்குவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நபர்களை தற்போதே அடையாளம் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பணம் கொடுக்கும் நபர்தான் வருங்கால திருடன் என்று என அதிரடி கிளப்பியுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்