இந்நிலையில், அந்த வேட்பு மனுக்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதில், ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
முக்கியமாக, மனுக்களில் கையெழுத்து இல்லாமல் இருப்பது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது, யாரும் முன் மொழியாமல் இருப்பது, உறுதிமொழி எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.