தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள, அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த திங்கள் கிழமை வெளியிட்டார்.
அதன்பின் அந்த பட்டியல் திருத்தப்பட்டு நேற்று, புதிய பட்டியல் வெளியானது. அதன்பின் அந்த பட்டியலும் திருத்தப்பட்டு, இன்று மதியம் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னை பல்லாவரம் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சி.வி.இளங்கோவன் என்பவரை மாற்றி, அவருக்கு பதிலாக சி.ஆர். சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.