இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ராமநாதபுரத்தில் அப்துல் லத்தீப், திருச்செந்தூரில் உத்தர்சிங், தூத்துக்குடியில் சேசையா பர்னாந்து ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்னதாக, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரது வேட்புமனு ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.