அதிர்ச்சி அடையாதீர்கள்.. காயத்ரி மற்றும் ஜூலி உள்ளிட்ட சிலர் ஓவியாவை டார்கெட் செய்து பேசி வருகின்றனர். சமீபத்தில், ஓவியா கண்ணீர் விட்டு அழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
எனவே, ஓவியா பேரவை, ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் வெளியேற்றப்படப் போவதில்லை. ஆனால், அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளவர்களுக்கு இது தெரியாது. எனவே, ஓவியாவை வெளியேற்றுகிறேன் என பொய்யாக கமல்ஹாசன் இந்த வாரம் அறிவிக்க வேண்டும். அப்போது ஓவியா, காயத்ரி மற்றும் ஜூலி ஆகியோரின் ரியாக்ஷனை தாங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.