ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு பெற்று மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், தொடக்கம் முதல் யாருக்கும் பிடிக்காதவராகவே இருந்து வருகிறார் ஜூலி. அதிலும், ஆளுக்கேற்றார் போல் அவர் போடும் பச்சோந்தி வேஷம், அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதிலும், ஓவியாவிடம் அவர் நடந்து கொண்ட விதம், அவர் மீது இருந்த அபிப்ராயத்தை காலி செய்தது.