உக்கிர பைரவபுரம் - திகிலை கிளப்பும் யாழ்ப்பாண கிராமம் [வீடியோ]

புதன், 9 மார்ச் 2016 (17:53 IST)
உக்கிர பைரவபுரம். இந்தப் பெயரே கொஞ்சம் திகிலைக் கொடுக்கிறதல்லவா? யாழ்ப்பாணத்தில் படமாக்கப்படும் முதலாவது முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் மெகா சீரியலின் பெயர்தான், உக்கிர பைரவபுரம்.
 

 
சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரியலின் கதை என்ன? மூன்று வெவ்வேறு ட்ராக்குகளில் ஆரம்பிக்கிறது கதை.
 
முதலாவது ட்ராக், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் யாருக்கும் புரியாமல் மர்மமாக நடைபெறும் சில விஷயங்கள். இரண்டாவது ட்ராக், முன்பு யுத்தம் நடந்து தற்போது ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில், 22 வயதுப் பெண்ணுக்கு ஞாபகத்தில் வரும், 23 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்பிறவி நினைவுகள். மூன்றாவது ட்ராக், வெளிநாட்டு உளவுத்துறைகள், யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடந்த காலத்தில் இருந்து வைத்திருக்கும் உளவு வலைப் பின்னல் அல்லது, ஸ்பை நெட்வெர்க்.
 

தயாரிப்பாளர் ரிஷி
 
இந்த மூன்று வெவ்வேறு ட்ராக்குகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம்தான், உக்கிர பைரவபுரம்.
 
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்காக 'வணக்கம் தாய்நாடு', 'சர்வதேச புலனாய்வு' என இரு ஹிட் நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொடுக்கும் ரிஷியின் தயாரிப்பில் உருவாகிறது இந்த புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் மெகா சீரியல், உக்கிர பைரவபுரம்.
 
முதல்கட்ட படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிவிட்டது. 80 சதவீதமான படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற, வெளிநாட்டு உளவுத்துறைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், அமெரிக்காவிலும் கனடாவிலும் படமாக்கப்படவுள்ளன. 
 
உக்கிர பைரவபுரம் மெகா சீரியலின் அறிமுகக் காட்சியை கீழே பார்க்கலாம்:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்