ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பதாக கூறப்பட்டது. அனுஷ்காவும் நடித்தார். தற்போது திடீரென அனுஷ்காவுடன் த்ரிஷாவும் இணைந்துள்ளார். படத்தின் கதைப்படி அஜீத் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை எனவும், அவரது மனைவியாக த்ரிஷா நடிப்பதாகவும் செய்தி கசிந்துள்ளது. ஆனால் செய்தியை கௌதம் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.
ஆக்சன் த்ரில்லராக தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க, டான் மெக்கார்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கு ஒன்றை அஜீத்தும், அனுஷ்காவும் இணைந்து துப்பறிவதுதான் படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது.