நீங்களும் ஹீரோ ஆக இயக்குநர் பார்த்திபனின் யோசனை

செவ்வாய், 13 ஜூன் 2017 (12:54 IST)
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறந்த படைப்பாளியாவார். திரைத்துறையில் நடிப்பு, நெறியாள்கை, திரைக்கதை, இயக்கம், பாடலாசிரியர் முதலானவற்றிலும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். 75இக்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.

 
பன்முகத்திறன் கொண்ட இயக்குநர் இரா.பார்த்திபன், இலக்கியம், கலை, படைப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ்  சினிமாவின் எப்போதும் வித்தியாசம் என்றாலே இயக்குனர் பார்த்திபன் தான். தன்னுடைய அதிரடி வசனங்களால் அசத்துவார். சமூகம் சார்ந்த கருத்துகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெரிவிப்பார்.
 
இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீங்களும் Hero ஆகணுமா என்ற பதாகையை கையில் ஏந்தியபடி ரத்ததானம்  பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்