கதையின் நாயகியாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்! சைத்ரா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 1 நவம்பர் 2023 (13:49 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவோடு அவர் நடித்திருந்த கடமையை செய் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் சைத்ரா என்ற படத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் 24 மணி நேரத்துக்குள் நடக்கும் கதையாக உருவாகியுள்ளதாகவும் நவம்பர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்