அருண் விஜய் படத்துக்கு இதுதான் முதல் முறை… யானை செய்த சாதனை!

திங்கள், 13 டிசம்பர் 2021 (14:55 IST)
அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் யானை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் யானை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை இப்போது படக்குழு தொடங்கியுள்ளது. சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஜி நெட்வொர்க் கைப்பற்றியுள்ளதாம். அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸுக்கு முன்னரே வியாபாரம் ஆவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்