பொறுத்துப் பார்த்த இந்து, நேரில் அழைத்து சிவாவைக் கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைச் சிவா கட்டிப் பிடித்து முத்தமிட முயன்றிருக்கிறார். இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து, சிவாவைச் செருப்பால் அடித்து விரட்டியிருக்கிறார்.
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா மீது புகார் (FIR) பதிவு செய்திருக்கிறார். இதையறிந்த சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு ஃபோன் செய்து, படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துத் தலைமறைவாகி விட்டார்.