இந்நிலையில் இந்த படத்திற்கும் அமர்க்களம் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் அமர்க்களம் படத்திற்கு முன்பு அஜித்திற்கு பெரிய விபத்து ஏற்பட்டு, அப்போது அவரால் எழுந்து கூட உட்கார முடியாது நிலை. தலையை மட்டுமே ஆட்ட முடியும், அப்படி ஒரு கண்டிஷன்.
அந்த நேரத்தில் இயக்குனர் சரண் அவரை பார்க்க வர, ‘சார் அடுத்து நம்ம செம்ம ஆக்ஷன் படம் பண்றோம்’ என கூறினாராம் அஹித். அப்படி உருவானதுதான் அமர்க்களம் படம். இதேபோல் தான் விவேகமும்,பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு மிகப்பெரும் ஒரு ஆக்ஷன் படத்தில் அஜித் நடித்து வருகின்றார்.