வெற்றி பெற்ற டியூனை மீண்டும் பயன்படுத்தும் யுவன்

திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (16:58 IST)
யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஒரு டஜன் படங்கள் தற்போது அவர் கைவசம் உள்ளன.


 
 
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் அவர்தான் இசை. இந்தப் படத்தில், முதல் பாகத்தில் இடம்பெற்ற, யாரோ... யாருக்குள் இங்கு யாரோ... பாடலின் டியூனை அப்படியே பயன்படுத்துகிறார். வரிகள் மட்டும் புதுசு.
 
சென்னை 28 படத்தின் ஆகச்சிறந்த படல் இது. ஆனால், பாடலின் தரத்தின் அளவுக்கு பாடல் ஹிட்டாகவில்லை. 
 
அந்த டியூனை யுவன் மறுபடியும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்