ராஜமௌலி அடுத்த படம் என்ன?; பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

வியாழன், 18 ஜனவரி 2018 (11:53 IST)
இயக்குநர் ராஜமௌலி 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர். 'பாகுபலி' இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 கோடிக்கும்  மேல் வசூல் செய்தது.
இப்படத்தையடுத்து இவர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. 'பாகுபலி 2' படம் வெளிவந்து எட்டு மாதங்களுக்கு ஆன பின்னும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் உள்ளார். வரும்  அக்டோபர் மாதம் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க உள்ள அந்தப் படத்திற்காக இயக்குநர், ஹீரோக்கள் சம்பளம் இல்லாமல் சுமார் 90 கோடி வரை ராஜமௌலி பட்ஜெட் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் பட்ஜெட் 150 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதனால், படத்தைத் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்