நடிகையின் ஆதாரமும், மூலதனமும் அழகு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால், அதைவிட முக்கியமான வேறு சிலவும் இருக்கிறது என்றார் நிக்கி கல்ராணி.
கோ 2 படம் குறித்து பேசியவர், "தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் அரசியலையும் ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்" என்றார்.
"இந்தப் படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவர்கள் எப்படி மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.