நாளை முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால் அதிரடி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (22:10 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது படுடேமேஜான நடிகர் விஷால், இழந்த மதிப்பை மீண்டும் பெற தற்போது நெடுவாசல் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்




தமிழக முழுவதும் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் விஷயம், புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியி ஹைட்ரோகார்பன் என்ற மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம்தான்

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் திரையுலகினர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால் குரல் கொடுத்துள்ளார்

இன்று நடைபெற்ற இசைவிழா ஒன்றில் பேசிய விஷால், '''விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன்.

நாளை முதல் நெடுவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து என் ஆதரவைத் தெரிவிக்க உள்ளேன்'' என்று கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்