எலிகளைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் – விஷால் பாய்ச்சல்

புதன், 31 மே 2017 (15:40 IST)
நான் எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தெரிவித்து உள்ளார்.


 

 
கடந்த வருடம் நடைபெற்ற சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே ஒரு படம் உருவாகி இருக்கிறது. இதன் டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஷால், “நான் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சொல்கிறார்கள். எந்த முடிவையுமே நான் அப்படி எடுப்பது இல்லை. சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் எல்லோரையும் கலந்துதான் முடிவெடுக்கிறேன்.
 
அப்படித்தான் வேலை நிறுத்த முடிவையும் அறிவித்தேன். ஆனால், எந்தெந்த பொந்துகளில் இருந்தோ எலிகள் கிளம்பி வருகின்றன. க்யூப் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனால், 5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஒருவன் வாசலில் நிற்கிறான். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன். டிசம்பர் மாதத்திற்குள் எல்லா தயாரிப்பாளரும் லாபம் சம்பாதிக்கும் வழியை உருவாக்கிக் காட்டுவேன்” என்று பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்