மகேந்திர பாகுபலி அமரேந்திர பாகுபலியுடன்: வைரல் புகைப்படம்!!

திங்கள், 8 மே 2017 (14:48 IST)
பாகுபலி 2, 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது பாகுபலி.


 
 
இந்த படத்தை பற்றியும் படத்தில் நடித்தவர்கள் பற்றியும் தினம்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. 
 
அந்த வகையில், தற்போது பாகுபலி படத்தில் சில நிமிடங்களே வந்த குழந்தை பற்றி ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
 
பிறந்து 18 நாட்களே ஆன அக்‌ஷிதா என்ற பெண் குழந்தையை தான் அமரேந்திர பாகுபலி தேவசேனா மகனாக நடிக்க வைத்துள்ளனர். 
 
ரம்யா கிருஷ்ணன் குழந்தை தூக்கிப்பிடித்து தண்ணீரில் இருக்கும் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. அக்‌ஷிதா பாகுபலி செட்டில் பணியாற்றிய ஒருவரது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்