கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் - முதல்முறையாக இணைகிறார்கள்

செவ்வாய், 10 பிப்ரவரி 2015 (10:53 IST)
என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
 

 
என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விக்ரம்.
 
கௌதம் தற்போது சிம்புவை வைத்து தொடங்கிய படத்தை முடிப்பதில் தீவிரமாக உள்ளார். குறுகியகால தயாரிப்பான இது இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அவர் விக்ரமை இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்