காந்தி ஜெயந்திக்குப் பதில் நவராத்திரியில் திரைக்கு வரும் விக்ரமின் 10 எண்றதுக்குள்ள

திங்கள், 10 ஆகஸ்ட் 2015 (15:14 IST)
அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு 10 எண்றதுக்குள்ள படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்போது பட வெளியீட்டை அக்டோபர் 21 நவராத்திரிக்கு தள்ளி வைத்துள்ளனர். 
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி நடிக்க முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து 10 எண்றதுக்குள்ள படத்தை தயாரித்துள்ளனர். இதுவொரு ரோடு மூவி. பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தவாரம் முதல் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பை ராஜஸ்தானில் படமாக்குகின்றனர். சமந்தா, தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை முடித்துவிட்டார்.
 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு வெளியிடுவதாக இருந்த படத்தை, அக்டோபர் 21 நவராத்திரிக்கு தள்ளி வைத்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்