விசாக சிங்கும் இப்போது பேய்களின் ராஜ்ஜியத்தில்

வியாழன், 2 ஜூலை 2015 (15:21 IST)
தமிழ் சினிமாவை பேய்களிடமிருந்து யார் காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. இரண்டு வெள்ளைச் சேலையும், கொஞ்சம் தக்காளி சாஸும் இருந்தால் இருட்டு பங்களாவைத் தேடி புறப்பட்டுவிடுகிறார்கள் படமெடுக்க. 
ஒரு பேய் படம் ஹிட்டானால் முடிந்தது. அவதார், டைட்டானிக் கதையே சொன்னாலும், அதெல்லாம் இருக்கட்டும், பேய் கதை இருக்கா என்று கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பாவம் இயக்குனர்கள். அரை டஜன் நல்ல கதை வைத்திருப்பவர்களும் அடிஷனலாக ஒரு பேய் கதை தயார் செய்ய வேண்டியிருக்கிறது.
 
மணிசர்மா ஈரம் அறிவழகனின் அசிஸ்டெண்ட். அவருக்கு என்ன நெருக்கடியோ. முதல் படமாக ஒரு பேய்கதையை தேர்வு செய்திருக்கிறார். முழுக்க மூணாறில் படமாக்கப் போகும் இந்தப் படத்துக்கு விசாகா சிங்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
நடிகைகளுக்கும் நெருக்கடிதான். இன்னுமா பேயாக நடிக்கலை என்று அவர்களையும் கேட்கிறார்கள். இந்தப் படத்தோடு விசாகா சிங் தப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்